Saturday, May 11, 2013

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 2

 
 
 

குரு ‘குர்ட்ஜிஃப்’பின் உடனிருந்து பலகாலம் பயணம் செய்த சீடரான ஔஸ்பென்ஸ்கி, அடிக்கடி முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்ட குரு ‘குர்ட்ஜிஃப்’பால் ஒரு கட்டத்தில் குருவுக்கே எதிரியானார். அப்படி குர்ட்ஜிஃப் என்னதான் செய்தார்? குர்ட்ஜிப் செய்த வம்புகள் இந்தப் பகுதியிலும் தொடர்கிறது.

ஒருமுறை, ரயில் பயணத்தின்போது மிகவும் போதையில் இருப்பவர் போல் நடந்துகொண்டு ஔஸ்பென்ஸ்கியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கினார் குர்ட்ஜிஃப். அவரை, அவரது இருக்கைக்கு அழைத்து வந்து அமர்த்தவே பெரும்பாடுபட்டார் ஔஸ்பென்ஸ்கி.

திடீரென கைப்பெட்டி ஒன்றை தான் அமர்ந்திருந்த இருக்கையின் ஜன்னல் வழியே வீசிவிட்டு, “இவ்வளவு தான்” என்றார் குர்ட்ஜீஃப். அதிர்ந்துபோன ஔஸ்பென்ஸ்கி, “யாரோ ஒருவருடைய சூட்கேஸை நீங்கள் இப்படித் தூக்கி எறிந்திருக்கக் கூடாது. பெட்டியின் சொந்தக்காரனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?” என்று பதறினார்.

சிறிதும் சலனமின்றி வந்தது குர்ட்ஜீஃப்பின் பதில், “ஔஸ்பென்ஸ்கி, அது உன்னுடைய பெட்டிதான்…”

செய்வதறியாது திகைத்த ஔஸ்பென்ஸ்கி, “நான் செய்த ஆய்வுப் பணி எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே,” என்று பதறினார்.

குர்ட்ஜிஃப் தீர்க்கமாக பதிளித்தார், “நீ செய்த பணி என்னிடம் பத்திரமாக இருக்கிறது. பெட்டிதான் சென்றுவிட்டது…”

மற்றொரு முறை உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம், “உடனடியாக சந்திக்க வரவும்” என்று லண்டனிலிருந்த ஔஸ்பென்ஸ்கிக்கு தந்தி அனுப்பினார் குர்ட்ஜீஃப். சோவியத் பகுதியை யாரும் எளிதில் கடந்து உயிருடன் செல்ல முடியாத நிலை அப்போது. தனது குருவின் அழைப்பிற்கு இசைந்து, அரும்பாடுபட்டு மூன்று வாரம் பயணித்து பல நாட்டு எல்லைகளை யாருமறியாது கடந்து, குர்ட்ஜிஃப்பின் இருப்பிடத்தை அடைந்தார் ஔஸ்பென்ஸ்கி.

குர்ட்ஜிஃப் காலைக் காபி பருகிக் கொண்டே அவரை பார்த்து, “ஓ… வந்துவிட்டாயா நீ? அப்போ உடனே கிளம்பிவிடு…” என்றார். இதை சற்றும் எதிர்பாராத ஔஸ்பென்ஸ்கி, “இதற்குமேல் என்னால் பொருத்துக் கொள்ள முடியாது,” என்று கூறி, குர்ட்ஜிஃப்பிடமிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

குர்ட்ஜிஃப் எதற்காகவும் கலங்கும் மனிதர் இல்லை, புகைப்படங்களில் அவருடைய முகத்தைப் பார்த்தாலே அது புரியும். ஆனால் உயர்ந்த ஆன்மீக சாத்தியத்தின் மிக அருகில் வந்த ஔஸ்பென்ஸ்கி, கடைசி நேரத்தில் அதை நழுவ விடும் வகையில், அவரை விட்டு விலகிச் சென்றதை நினைத்து, “அவன் மிக அருகில் வந்திருந்தான்… ஆனால் சென்று விட்டானே…!” என்று ஔஸ்பென்ஸ்கியின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுதார்.

முன்னர் குர்ட்ஜிஃப்பின் பணிகளைப் பற்றியும் அவருடன் தான் பெற்ற உன்னத அனுபவங்கள் பற்றியும் உயர்வாக எழுதிவந்த ஔஸ்பென்ஸ்கி, இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு எதிராக எழுத ஆரம்பித்தார். குர்ட்ஜிஃப்பிற்கு அது ஒரு பொருட்டாக இல்லை, ஆனால் ஔஸ்பென்ஸ்கி அவரைவிட்டு விலகிச் சென்றது மட்டுமே, அவரை மீளா துயரில் விட்டுவிட்டது.

Chrysanth WebStory Published by WebStory

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 1

 
 

குரு என்பவர், எப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறார். ஒரு முறை கண்களில் நீர் பெருகக் கருணையுடன், இன்னொருமுறை நெருங்க முடியாத அதிதீவிர மனிதராய், மற்றொருமுறை சலனமற்ற பேர் இருப்பாய்… 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற குருவான ‘குர்ட்ஜிஃப்’, தனது சீடரே தனக்கு எதிரியாகும் அளவிற்கு, செய்தவை என்ன? இங்கே படிக்கலாம்…

ஒருவர் விருப்பத்துடன் இல்லாத போது, நீங்கள் அவரது எண்ணத்தை அழிக்க முயற்சித்தால், மிக விரைவில் அவர் உங்கள் எதிரியாக மாறுவார். பெற்றோர்-பிள்ளை, முதலாளி- தொழிலாளி போன்ற எந்த உறவிலும் இது பொருந்தும். ஆனால், ஒரு குருவின் செயலோ, நம் விருப்பத்தை எப்படியாவது அழிக்க முயற்சி செய்வதாகவே இருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில், தனது நெருங்கிய சீடர்களை, சில நேரங்களில் தங்கள் எதிரிகளாக மாற்றிக்கொண்ட குருமார்களும் உள்ளனர். அந்த வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் குர்ட்ஜிஃப்.

குர்ட்ஜிஃப், சாதாரண மக்கள் அறிந்திருந்த ஆன்மீகவாதிகளிடமிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். தனது தேடலில் ஆன்மீக பரிமாணத்தில் உயர்ந்த மக்களை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஆய்வு பயணங்களை தொடங்கினார். அவர், அவரைச் சுற்றியுள்ள மக்களின் விருப்பத்தை அழிக்க மிக வினோதமான வழிமுறைகளை பயன்படுத்தியதுண்டு. குர்ட்ஜிஃப், அவரது நெருங்கிய சீடர்களில் ஒருவரான ஔஸ்பென்ஸ்கியை மட்டும்விட்டு வைத்தாரா என்ன?!

ஔஸ்பென்ஸ்கி, ஏற்கனவே உலகில் நன்கு அறியப்பட்ட ஒரு பெரிய தத்துவஞானியாகவும், கணித மேதையாகவும் இருந்தார். பின்னர் இவர் எல்லா இடங்களிலும் குர்ட்ஜிஃபின் வழக்கமான பயணத்துணையாக ஆகிவிட்டார். வெளி உலகில், குர்ட்ஜிஃப் அறியப்பட்டதற்கு பல விதங்களில் ஔஸ்பென்ஸ்கி காரணமாக இருந்திருக்கிறார்.

குர்ட்ஜிஃப்பை முதன்முதலாக பார்க்க விரும்பியபோது இங்கிலாந்திலிருந்து வெகுதொலைவு பயணித்து வந்திருந்தார் ஔஸ்பென்ஸ்கி. குர்ட்ஜிஃப் அந்த நேரத்தில், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மத்திய ஆசியாவில் தங்கியிருந்தார்.

அவர் குர்ட்ஜிஃப்பின் இடத்திற்கு சென்ற போது, அவரை குர்ட்ஜீஃப் காத்திருக்க செய்தார். ஔஸ்பென்ஸ்கி, உலகப் புகழ்பெற்ற தத்துவமேதை என்றறிந்திருந்தும், குர்ட்ஜிஃப் மூன்று நாட்களுக்கு மேலாக அவரை தன் அறையின் வாயிலிலேயே காத்திருக்க செய்தார். இது ஔஸ்பென்ஸ்கிக்கு எரிச்சலாக இருந்தது. இருப்பினும், ஒரு ஞானமடைந்த குருவினை சந்திப்பதைத் தன் வாழ்நாளின் மிகப் பெரிய தருணமாக எண்ணி அவர் காத்திருந்தார். இறுதியில், குர்ட்ஜிஃப் அவரை பார்த்ததும் “ஏற்கனவே நீ உலகறிந்த மேதை என்பதால், உனக்கு தெரிந்ததைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு அவசியமில்லை. உனக்கு தெரியாத சில விஷயங்களை பற்றி மட்டுமே பேசப்போகிறேன். அதனால், உனக்கு தெரிந்த அனைத்தையும் இதில் எழுது” என்று கூறி சிறு காகித துண்டினை ஔஸ்பென்ஸ்கியிடம் கொடுத்தார்.

இது முதலில் அவருக்கு அவமானமாக இருந்தாலும், குர்ட்ஜிஃப் கூறியதை அப்போது தட்ட முடியாமல் எழுத முடிவெடுத்தார். ஆனால், பல மணி நேரத்திற்கு பின்பும் அவரால் எதுவும் எழுத முடியாமல் போனது! தான் அந்த விஷயங்கள் எதுவுமே தனது சொந்த அறிவல்ல என்று உணர்ந்த அவர், “எனக்கு எதுவும் தெரியாது” என்று குர்ட்ஜிஃப்பிடம் ஒப்புக்கொண்டார்! அன்று அவரை ஏற்றுக்கொண்டார் குர்ட்ஜிஃப். அதிலிருந்து குர்ட்ஜிஃப்புடன் பயணித்து, அவரது வாழ்க்கை முறை மற்றும் வழிமுறைகள் குறித்து எழுத ஆரம்பித்தார் ஔஸ்பென்ஸ்கி.

Chrysanth WebStory Published by WebStory

Saturday, May 4, 2013

எதிர்நீச்சல் – திரை விமர்சனம்

509b500c-142a-4141-8cea-660373451ea6_S_secvpf.gif
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் “உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.

வேண்டுதலின்படி தனது குலசாமியின் பெயரான ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவனாகி, தனியார் கம்பெனியில் வேலை செய்யும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய பெயரை அனைவரும் சுருக்கி அழைப்பது மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது. இதனால் வேலையை விட்டுவிடுகிறார். இவர் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் பெயர் சரியில்லை என்று சொல்லி இவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

விரக்தியடைந்த சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரிஷ் என்று மாற்றி அதை பதிவும் செய்கிறார். தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொள்கிறார். இதையடுத்து பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ப்ரியா ஆனந்தை சிவகார்த்திகேயன் சந்திக்கிறார். பார்த்தவுடனேயே அவர்மீது காதல் வயப்படும் சிவகார்த்திகேயன், அவருடன் நட்பாக பழகி இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயனின் பழைய பெயர் ப்ரியா ஆனந்த்-க்கு தெரிய வருகிறது. இந்த சிறு விஷயத்தை தன்னிடம் மறைத்ததற்காக சிவகார்த்திகேயன் மீது கோபப்படுகிறார் பிரியா ஆனந்த். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், பெரிதளவில் ஏதாவது சாதித்தால் தனது பழைய பெயர் மறைந்துவிடும் என்ற நண்பனின் யோசனைப்படி, சென்னையில் நடக்கும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற முடிவெடுக்கிறார். அவருக்கு பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார்.

இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்துகொண்டு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகனான சிவகார்த்திகேயன் குஞ்சிபாதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவஸ்தைபடுவதாகட்டும், ப்ரியா ஆனந்தை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், முதல் பாதியில் காமெடியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் பிற்பாதியில் ஓட்ட வீரனாக ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார்.

முற்பாதியில் டீச்சராக வரும் ப்ரியா ஆனந்த்-க்கு தனது முந்தைய படங்களைவிட இப்படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். பிற்பாதியில் இவர் அவ்வளவாக தலைகாட்டாதது ஏமாற்றத்தை தருகிறது. பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாக, சிவகார்த்திகேயனுக்கு பயிற்சியாளராக வருகிறார் ‘அட்டக்கத்தி’ நந்திதா. அருமையான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் சதீஷ் தன்னுடைய பங்குக்கு பின்னியெடுத்திருக்கிறார். சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களில் ஒரு புது காமெடி கூட்டணியை உருவாக்கலாம். மனோபாலா, மதன்பாப் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் செம ஹிட்டாகியுள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார். ‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பாடல் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும், தனுஷ், சிவா, நயன்தரா ஆகியோரின் குத்தாட்டம் ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது.

ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘வெளிச்ச பூவே’ பாடல் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதற்பாதியை காமெடிகளை கட்டினாலும், பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. அடுத்து என்ன காட்சி என்பதை முன்பே ஊகிக்கும் விதமான காட்சிகளே நிறைய அமைந்திருக்கிறது. சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

மற்றபடி ‘எதிர்நீச்சல்’ ஜாலியாக பயணம் செய்யலாம்.

Chrysanth WebStory Published by WebStory

மூன்று பேர் மூன்று காதல் – திரை விமர்சனம்

03-moondru-per-moondru-kadhal-
நடிப்பு: அர்ஜூன், சேரன், விமல், பானு, சுர்வின், லாசினி, தம்பி ராமையா
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: போஜன் கே தினேஷ்
தயாரிப்பு: பாரத்குமார், மகேந்திரன், மஹா அஜய் பிரசாத்
இயக்கம்: எஸ்எம் வசந்த்

மீண்டும் ஒரு காதல் கதையுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த். மூன்று ஜோடிகளின் காதல்களை ஒரு தொகுப்பாக, கிட்டத்தட்ட நாவல் மாதிரி தந்திருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யமாக அவரால் தர முடியாமல் போனதுதான் படத்தின் பிரச்சினை!

மலையும் மலை சார்ந்த இடமுமான ஊட்டியில் சாப்ட்வேர் பணியிலிருக்கும் விமல், சக பணியாளர் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் கடைசியில் காதலிலிருந்து விலகிக் கொள்கிறார். அது ஏன் என்ற கேள்விக்கு, தான் சந்தித்த இரண்டு ப்ளாஷ்பேக் காதல்களைச் சொல்கிறார்.

அதில் ஒன்று ‘கடலும் கடல் சார்ந்த இடமுமான’ நாகர்கோயிலில் வசிக்கும் என்ஜிஓ சேரன் – பிஸியோதெரபிஸ்ட் பானு காதல் கதை.

அடுத்தது, ‘நிலமும் நிலம் சார்ந்த இடமுமான’ சென்னையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அர்ஜூன் – வீராங்கனை சுர்வின் காதல். இந்த மூன்று காதல்களையும் ஒரு நாவலாக எழுதி வெளியிடும் நிகழ்ச்சியில், அந்த காதல்களின் க்ளைமாக்ஸை சொல்கிறார் விமல். அதை மூன்று மணிநேர கொட்டாவிகளைச் சகித்துக் கொண்டு தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு காதலுக்கும் நீள நீளமான வர்ணனைகள்… காட்சியமைப்புகள். அவை சுவாரஸ்யமாக இருந்தாலாவது பார்க்கலாம். வசனங்களுக்கும் சில சீரியஸ் காட்சிகளுக்கும் கண்டமேனிக்கு சிரித்து வைக்கிறார்கள் பார்வையாளர்கள்.

உதாரணம்… இரவில் யாருக்கும் தெரியாமல் நீச்சல் பயிற்சிக்குப் போகும் சுர்வின் காட்சியமைப்பு.

இந்த மூன்று காதல்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு பக்குவமாக அமைந்திருப்பது சேரன் – பானு கதைதான். முதல் முறையாக அளவோடு நடித்திருக்கிறார் சேரன். பானுவின் தோற்றம், நடிப்பு இரண்டுமே அழகு!

அர்ஜூன் – சுர்வின் காதலில் ஈர்ப்பே இல்லை. 110 மீட்டர் 51 செகன்ட்ஸ் என்ற அர்ஜூனின் இலக்குதானே அவர்கள் காதலுக்கு வில்லனாகிறது?

விமல் – லாசினி காதல்… ப்ச்… அட, நடிகர்களாகக் கூட அந்த இருவரும் தேறவில்லை.

moondru per moondru kadhal review

இந்தப் படத்தின் பெரும் பலம் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான பாடல்கள் மற்றும் சுண்டியிழுக்கும் பின்னணி இசை. காதலுக்கு ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கிறார் பாருங்கள்… ஆஹா!

அடுத்தது, போஜன் கே தினேஷின் ஒளிப்பதிவு. சமீப கால படங்களில் ரசிக்க வைத்த காட்சிப் பதிவு இதுதான்.

இயக்குநர் வசந்த் வித்தியாசமாக சினிமா எடுக்க பிரயாசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஆமை வேகம், சுவாரஸ்யம் குறைந்த காட்சியமைப்புகள் அவரது முயற்சியை பலிகொண்டுவிட்டன!

Chrysanth WebStory Published by WebStory

8000 அடி ஆழத்தில் ஓர் அதிசய உலகம்!


அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமான விடயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது.

காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது. தலா 16 சென்டிமீற்றர் நீளமுடைய இவை, எரிமலை வாய் அருகே சுமார் 600 என்ற எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன.

மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது.இங்கு ஒரு புதிய வகை ஆக்டோபஸையும் கண்டியிடித்திருக்கும் விஞ்ஞானிகள். அது இதுவரை அறியப்படாத ஒரு புது இனம் என்கிறார்கள். ஆனால், அதை விஞ்ஞானிகளால் பிடிக்க முடியவில்லை. மேலும், இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.

8000 அடி ஆழத்தில் ஓர் அதிசய உலகம்!<br /> <br /> அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.<br /> <br /> ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமான விடயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது.<br /> <br /> காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது. தலா 16 சென்டிமீற்றர் நீளமுடைய இவை, எரிமலை வாய் அருகே சுமார் 600 என்ற எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன.<br /> <br /> மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது.இங்கு ஒரு புதிய வகை ஆக்டோபஸையும் கண்டியிடித்திருக்கும் விஞ்ஞானிகள். அது இதுவரை அறியப்படாத ஒரு புது இனம் என்கிறார்கள். ஆனால், அதை விஞ்ஞானிகளால் பிடிக்க முடியவில்லை. மேலும், இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.<br /> <br /> -அதிசயம்
Chrysanth WebStory Published by WebStory

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ்!

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் !!!

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.
இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள் .இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.

வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

Chrysanth WebStory Published by WebStory

பார்பவர்கள் உள்ளம் குளிரும் ஓர் அழகிய இடம் மேகமலை !!

 
பார்பவர்கள் உள்ளம் குளிரும் ஓர் அழகிய இடம் மேகமலை !!\
 
வர்த்தகமயமாகாதலால் சீர்கெடாத மலைப் பகுதி. காஃபி தோட்டங்களும் நடுவில் ஓடும் அழகிய நதியும் மேகமலை பகுதியே சிறப்பித்து காட்டுகிறது 

மேகமலை ஏரிப்பகுதி

மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலைமற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது.

தனியார் நிறுவன உடமை

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகவும, இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதி தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைப்பகுதியின் சாலை உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்நிறுவனத்தால் இப்பாதையைச் சரிவர பராமரிக்க முடியாததால் சாலையின் பெரும்பகுதிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியின் சாலையைப் பராமரிக்க தேயிலைத் தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.

நீர்மின்சக்தி திட்டம்

இம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் பேரூராட்சி அமைப்பில் ஊர் ஒன்று உள்ளது. இந்த ஊர் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நகரியம் எனும் அமைப்பிலிருந்தது. இம்மலைப்பகுதியில் வெண்ணியார், இரவங்கலார், மகராஜாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இம்மலைப்பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் “சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம்” அமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் வசதி!

சிறிய, பெரிய “ரிசார்ட்டுகள்’ உண்டு. தங்குவதற்கு சில ஆயிரம் செலவாகும். இருந்தாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு.தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை.
சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறது குரங்குகள் கூட்டம்.சாலை இருபது அடியாக இருப்பதால், எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டால் மட்டுமே மலை ஏற முடியும். முழுவதும் பனிமூட்டம். சூரிய வெளிச்சம் உள்ளே வராது. அதனால் மலையில் லேசான இருட்டு. ஆங்காங்கே சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் குறைவுதான்.

மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் பஸ்சை நம்பி இருப்பதில்லை. மாறாக ஆண்களும், பெண்களும் குறுக்கு வழியில் மலையில் ஏறுகிறார்கள். எட்டு மணி நேர வேலைக்காக பதினாறு மணி நேரம் அவர்கள் மேலும் கீழுமாய் நடப்பது ஆச்சரியம்!அதிகாலையில் மலை ஏறுபவர்கள் வேலை முடிந்து மாலை நான்கு மணிக்கு கீழே இறங்குகிறார்கள். வீடு வந்து சேரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடுமாம்.

வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். குளிர் தாங்கிக் கொள்ளலாம்.

“மேகமலையில் அவசரத்துக்கு டீ குடிக்க வேண்டும் என்றால் கூட வழியில்லை. ஒன்றிரண்டு “ரிசார்ட்டுகள்’ மட்டுமே உண்டு. மதிய உணவு அங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விலை சற்று அதிகம். குடும்பத்தோடு செல்பவர்கள் கையோடு உணவு கொண்டு செல்வது நல்லது!’

வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள். எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது உண்டாம். தண்ணீர் அத்தனை குளிர்ச்சி.

இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். அங்கே திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு. அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வருகிறது கம்பன் பள்ளத்தாக்கு. இடையிடையே மலைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியில் ஒரு சில பயணிகள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அமோகம். முடிந்தவரை வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் சென்றால், இடங்களின் சிறப்பு பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.

எப்படி செல்ல வேண்டும் :

பஸ்ஸில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பஸ் வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.

Chrysanth WebStory Published by WebStory